சென்னை : சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு நடப்பாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்துக்கு 10டோக்கள்கள் வீதம் 6 மாதங்கள் மாநகர் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க டோக்கன் வழங்கப்படுகிறது.
இதற்காக, சென்னையில் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் என 42 இடங்களில் இந்த மாதம் 21ம்தேதி முதல் ஜூலை 31ம்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படவுள்ளது.
மூத்த குடிமக்கள் பயண டோக்கன்களை பெற இருப்பிட சான்று. குடும்ப அட்டை, வயது சான்று, ஆதார் அட்டை, 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…