விடுமுறை நாட்களில் அலுவலகம் நடத்தும் பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை அதிகரித்தும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்பர்களின் காப்பீட்டு தொகையை உயர்த்தும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் நிலோபர் கபில் இன்று அறிவித்தார்.
இன்று சட்டமன்றத்தில் அமைச்சர் நிலோபர் கபில் இரண்டு சட்ட மசோதாக்களை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது, விதியை மீறி தேசிய மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் அலுவலகம் நடத்தும் பெரிய நிறுவைங்களின் அபராத தொகை கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தபடவில்லை எனவே அதை உயர்த்தி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அதன்படி 1958 ஆண்டு தொழிற்நிறுவனங்கள் சட்டத்தின் 8ம் சட்ட பிரிவில் உள்ள 1000 ரூபாய் அபராதம் 5000 ருபாயாகவும், 2500 ரூபாய் அபராதம் 10000 ருபாயாகவும். 9ம் சட்ட பிரிவில் உள்ள 500 ரூபாய் அபராதம் 1000 ருபாயாகவும். 12ம் சட்ட பிரிவில் உள்ள 500 ரூபாய் அபராதம் 5000 ருபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கான காப்பீட்டுத்தொகையை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதாவையும் தாக்கல் செய்தார். அதன்படி, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 7- AA எனும் பிரிவில் 50000 என்பதற்கு பதில் ஒரு லட்சம் என மாற்றப்பட்டுள்ளது.
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி…
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார்.…
டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை…
சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை…
அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.…