எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு மாநில அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள நிலை தொடர்பாகவும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனையின்போது தமிழகத்தின் இறுதிவாக்காளர் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…