18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடாத்த தயார்….தமிழக தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!

Default Image

எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு மாநில அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள நிலை தொடர்பாகவும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின்போது தமிழகத்தின் இறுதிவாக்காளர் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்