நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதற்கு,பிற அரசியல் தலைவர்கள் ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,குழந்தையின் பிறந்த நாளானது,அக்குழந்தை பிறந்த நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும்.மாறாக,குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல.எனவே,தமிழ்நாடு நாள் நவம்பர் 1 ஆம் தேதியாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்ட முந்தைய அரசின் முடிவை இப்போது ஜூலை 18-ஆம் தேதியாக மாற்றுவதன் மூலம் தேவையற்ற சிக்கலை திமுக அரசு உருவாக்குகிறது.‘குழந்தையின் பிறந்த நாள் எப்போதும் குழந்தை பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது, குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல’.
நவம்பர் 1, 1956 அன்று, மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் மற்றும் அதிகாரப்பூர்வமாக மாநிலத்தின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.ஜூலை 18, 1967 அன்று தமிழ்நாடு என்று பெயர் வழங்கப்பட்டது.அதன்படி,’தமிழ்நாடு நாள்’ நவம்பர் 1 ஆம் தேதியாகதான் இருக்க வேண்டும்.
எனவே,நவம்பர் 1 ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாளாக’ திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும்”,என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…