தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் தற்போது பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது.இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்து. இதில், இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் மன்ற நிர்வாகி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சென்னையில் அமைதியான முறையில், போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செய்ய அனுமதிக்க முடியாது. சென்னை மாநகர காவல்துறை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது. இதனால் அந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில், தேசியக் கோடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…