சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயகாந்திடம் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் முதல்வரிடம், வியாஜயகாந்த் வழங்கியதாக கூறப்படுகிறது.
திமுக, அதிமுக தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அமைந்த கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மாதம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்த உதயநிதி தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்திடம் இருந்து வாழ்த்துக்களையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…