ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்!

Published by
லீனா

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்.

சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்களது மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார்.

அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும், நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago