அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சிகள் சார்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழல், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தவுள்ளார். அக்டோபர் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

8 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

8 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

8 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

9 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

9 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

10 hours ago