காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ளதால் கடலில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
ஆனால் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன் கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு அவர்களிடம் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களும் இல்லாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஓகி புயலின் போது இதே போன்ற சூழலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டதால் மீனவ கிராமங்களை மீண்டும் அச்சம் சூழ்ந்துள்ளது.
புயல் சின்னத்தால் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,100 நாட்டுப்படகுகள் இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வலுவான நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது என்றும், அடுத்த 36 மணிநேரத்தில் மாலத்தீவு அருகே குறைந்த காற்றழுத்தமாக மாறும் என்றும் தெற்கு கேரளா, மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…