அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Default Image

காற்றழுத்த தாழ்வு நிலை  வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ளதால் கடலில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

ஆனால் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன் கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு அவர்களிடம் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களும் இல்லாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஓகி புயலின் போது இதே போன்ற சூழலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டதால் மீனவ கிராமங்களை மீண்டும் அச்சம் சூழ்ந்துள்ளது.

புயல் சின்னத்தால் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,100 நாட்டுப்படகுகள் இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வலுவான நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது என்றும், அடுத்த 36 மணிநேரத்தில் மாலத்தீவு அருகே குறைந்த காற்றழுத்தமாக மாறும் என்றும் தெற்கு கேரளா, மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையம் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும்  எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்