இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை அடிச்சி தூக்கிய தமிழ்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்திற்குள் சிக்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் நிறுவனமும், விக்கிபீடியாவும் இணைந்து ‘வேங்கை திட்டம் 2.0’ என்ற கட்டுரை போட்டியை நடத்தியுள்ளனர். இந்த போட்டியானது, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், கட்டுரைகள் மற்றும் போட்டியாளர்களின் அடிப்படையில் தமிழ் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில், இந்தி மொழியில் 26 போட்டியாளர்கள் கலந்து கொண்டு, 417 கட்டுரைகளை மட்டுமே படைத்திருந்தனர்.
தமிழ் மொழியில் மொத்தம் 62 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், 2542 கட்டுரைகளை படைத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் மொழி முதலிடம் பிடித்த நிலையில், அடுத்ததடுத்த இடங்களை, பஞ்சாபி, பெங்காலி மற்றும் உருது போன்ற மொழிகள் பெற்றுள்ளனர். சம்ஸ்கிருத மொழியில், 4 போட்டியாளர்கள், 19 கட்டுரைகளை மட்டுமே படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…