மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது – அமைச்சர் துரைமுருகன்..!

Published by
Edison

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.

பின்னர்,இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறிகையில் : “மத்திய நீர்வளத்துறை அமைச்சர்  உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.அமைச்சர் அவர் மிக நன்றாக பழகினார்.நாங்கள் கொண்டு சென்ற பிரச்னையை மிக தெளிவாக ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார்.அதுதான் ஆச்சரியமாக உள்ளது.

இதனையடுத்து,உச்சநீதிமன்றமானது,ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால்,இதுவரை நமக்கு கிடைக்க வேண்டிய 50 டிஎம்சி அளவு தண்ணீரில் 8 டிஎம்சி அளவுகூட கிடைக்கவில்லை. எனவே,அதனை உடனே தரவேண்டி கர்நாடக அரசுக்கு அமைச்சர் அவர்கள் உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டோம்.உடனடியாக தான் பேசுவதாக அவர் உறுதியளித்தார்.

அதன்பின்னர்,தமிழகத்திடம் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு ,மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.இது மத்திய அரசை பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தோம்.அதற்கு அவர்,”எந்த பிரச்சனை ஆனாலும் தமிழக அரசை கேட்காமல் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.இரு மாநில அரசையும் கலந்து ஆலோசனை மேற்கொள்வோம்”.என்று தெரிவித்தார்.

மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல், மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பிறகு,இது தொடர்பாக ‘நடுவர் மன்றம்’ அமைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால்,இதுவரை மன்றம் அமைக்கப்படவில்லை.இதற்கு என்ன தீர்வு? என்று கேட்டோம்.

இதனால்,நடுவர் மன்றம் உடனடியாக அமைக்க உத்தரவிடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் ஆணையத்திற்கு நிரந்தர சேர்மன் அமைக்க வேண்டும் என்றும்,தற்போதைய சேர்மன் எங்களது குறைகளை நிராகரிப்பதாகவும் முறையிட்டோம்,உடனடியாக அவரை நீக்குவதாக கூறினார்.

பின்னர்,முல்லை-பெரியார் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினோம்.தமிழக அரசின் பிரச்சனைகள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.எனவே,அமைச்சருடனான பேச்சுவார்த்தை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.”என்றார்.

இதனையடுத்து,தமிழக அரசின் மந்த நிலையை பயன்படுத்தி தான் கர்நாடக அரசு அணையை கட்டியதா?என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு,”எங்களிடம் மந்தமும் இல்லை,மாந்தமும் இல்லை.”என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 minutes ago
கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

41 minutes ago
“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

45 minutes ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago