சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். முக்கியமாக சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழக்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றிய 94 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவித்துள்ளனர். சுமார் 72 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 144 தடையை மீறி வெளியே வாகனங்களில் சுற்றியதுக்கு சுமார் 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14க்கு பிறகு கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…