#Breaking: “9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு”- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Default Image

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை அறியும் வகையில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன்களை அறியும் வகையில் அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்பித்து வருவதால், அவர்களின் கற்றல் திறனை அறிவதற்காக இந்த தேர்வு நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்