குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள் – சீமான்

Default Image

குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என சீமான் கேள்வி.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், உள்ளிட்டவைகளை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது, அதனால், அவர்கள் இதை எடுப்பதில்லை.

குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்க பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் இடஒதுக்கீடு. எது உண்மையான சமூக நீதி என்று தெரியவில்லை. சமூகத்துக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான நீதி வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள். சமூக நீதியை பேசிய இந்த மாநிலத்தில் இதுவரை எடுக்கவில்லை. சமூக நீதியை பேசாத பீகார் மாநிலத்தில் எடுத்து வருகிறார்கள். தனியார்மயப்படுத்துவதில் இட ஒதுக்கீடு பயன்தராது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்