ஆன்லைன் வணிக உணவு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

Published by
கெளதம்

தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை.

தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் கூறுகையில், சென்னை போன்ற பெருமாநகரங்களில் தொலைபேசி மற்றும் இணையவழி வணிகம் மூலம் உணவு வேண்டுவோரின் இடங்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கும் முறைமை தற்காலத்தில் பெருகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் எளிதில் தொடர்பு வலைபின்னல் ஏற்படுத்துவதன் மூலம் இவ்வகைத் தொழிலில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. தொடர்புடைய நிறுவனங்கள் உணவு வழங்கல் பணிக்காக இருசக்கர வாகனமுடைய இளைஞர்களைப் பெருமளவு பணிக்கு அமர்த்துகின்றன.

ஒவ்வொரு உணவு வழங்கலுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற அடிப்படையில் ஊதியம் மற்றும் தொலைவு மற்றும் விரைவு போன்ற காரணங்களுக்காக ஊக்கத்தொகையையும் வழங்கி தொழிலை மேம்படுத்திய இந்நிறுவனங்கள் மக்களிடம் சென்றடைந்து நல்ல வரவேற்பையும் வருமானத்தையும் பெறத் தொடங்கிவிட்ட பிறகு அதற்காகப் பாடுபட்ட ஊழியர்களின் பணிகளில் அதிகக் கெடுபிடிகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தொடங்கிவிடுகின்றன.

அந்த வகையில் சென்னையில் இணையவழி வணிகம் மூலம் உணவு வழங்கும் தனியார் நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) தொடக்கத்தில் தனது ஊழியர்களுக்கு நேர்மையான முறையில் ஊதியத்தையும், ஊக்கத்தொகையையும் அளித்து வந்தது. ஆனால் தற்போது குறைந்தளவு தொலைவில் உள்ள இடங்களுக்கு உணவு கொண்டு வழங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை 40 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகக் குறைத்துள்ளது. இது தவிர நீண்ட தொலைவுக்குச் சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகையும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.

நாளொன்றுக்கு ஒரு ஊழியர் அதிகப்பட்சமாக 25 முறை உணவு வழங்கும் வாய்ப்புகளையும், ஒரு உணவு வழங்கலுக்கு 40 ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் நாளொன்றுக்கு ரூ.1,000 வரை வருமானமாகக் கிடைத்தது. கூடுதலாகக் கிடைக்கும் ஊக்கத்தொகை அவர்களுடைய உணவு மற்றும் எரிபொருள் தேவையை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது.

தற்போது ஒருமுறை உணவு வழங்க ரூ.15 எனவும் அதிகப்பட்சம் 20 முறை மட்டுமே வாய்ப்பும் வழங்கப்படுவதால் நாளொன்றுக்கு ரூ.300 வரை மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. இணையவழி உணவு வழங்கல் நிறுவனங்கள் உணவகங்களின் உண்மையான விற்பனை விலையை விட 30% வரை கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் உணவு வழங்கல் கட்டணமாகத் தொலைவைப் பொறுத்து ரூ.100 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்கள் உணவு வழங்கல் ஊழியர்களுக்கு ஊதியத்தை மிகுதியாகக் குறைத்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஏற்கனவே ஊரடங்கு காரணமாகப் பல்வேறு தொழில்களும் நலிவடைந்த நிலையில் உணவு வழங்கல் வாய்ப்புகள் குறைவாகக் கிடைக்கும் சூழல் நிலவுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுப் பரவிவரும் சூழலிலும் உயிரை பணயம் வைத்துக் களத்தில் பணியாற்றிப் பசி தீர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி அவர்களை வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளுவது சிறிதும் மனிதநேயமற்ற செயலாகும்.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண தொடர்புடைய நிறுவனம் முன்வரவில்லை என்றும் இதுதொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி ஊழியர்களின் ஊதியத்தைப் பாதிக்கும் மேலாகக் குறைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வறுமையில் வாடவிடும் இதுபோன்ற தனியார் பெரு நிறுவனங்கள் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் உடனடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகைச் செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதுபோன்று இணையவழி உணவு வழங்கலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்கள் இனிமேல் பாதிக்கப்படா வண்ணம் இணையவழி வணிக உணவு வழங்கலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

8 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

32 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

52 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

55 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago