கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.பின் எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.இதற்கு பலரும் தங்களது கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், முருக கடவுளையும் ,அவரது பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஒளிபரப்பு செய்தது அதிர்ச்சியும் ,வருத்தமும் அளிக்கிறது.மத நல்லிணக்கத்தையும் , இறை நம்பிக்கையும் அவமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இணையதளங்களை சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் குறித்து புகார் வருவதற்கு முன்னர் போலீசார் சம்பந்தப்பட்டோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…