கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

Default Image

 கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து  வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின்    சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.பின் எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.இதற்கு பலரும் தங்களது கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், முருக கடவுளையும் ,அவரது பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஒளிபரப்பு செய்தது அதிர்ச்சியும் ,வருத்தமும் அளிக்கிறது.மத நல்லிணக்கத்தையும் , இறை நம்பிக்கையும் அவமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இணையதளங்களை சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் குறித்து புகார் வருவதற்கு முன்னர் போலீசார் சம்பந்தப்பட்டோரை  கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்