பரபரப்பு.! வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு.!

Default Image
  • இன்று காலை 7 மணி முதல் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
  • கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக  இன்று காலை 7மணி முதல்  வாக்குபதிவு தொடங்கியது.

இன்று காலை முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு  கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சிறிது நேரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஈக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கான வாக்குசீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி வாக்கு சீட்டினை வீசி எரிந்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic