காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி மறைவுக்கு சீமான் இரங்கல்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள், பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது.
இவரது மறைவுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காஷ்மீரிய தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகத் தன் வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்டவரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான பெரு மரியாதைக்குரிய ஐயா சையது அலி ஷா கிலானி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.
காசுமீரிய தேசிய இனத்தின் உரிமைக்காக, தனது வாழ்வின் முற்பகுதியின் பெரும்பங்கை கொடுஞ்சிறையிலும், வயோதிக காலத்தின் பெரும்பங்கை வீட்டுச்சிறையிலும் கழித்த பெருந்தகை.
மண்ணின் உரிமைக்காகப் போராடிய மகத்தான தலைவர் ஐயா சையது அலி ஷா கிலானி மறைவினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியினருக்கும், காஷ்மீர மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…