pongal in govt school [File Image ]
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி (இன்று) பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட இருந்த இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாததால் அப்போது வழங்கப்படவில்லை. இதனால், இன்று அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…