அரக்கோணம்:போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகளாக அரசு பணிபுரிந்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்..!

Published by
Edison

அரக்கோணத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின், அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவர்,கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, ஷோபனாவின் மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் மாவட்ட தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்ததுள்ளது.இதன் காரணமாக,போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியாற்றியதால் ஷோபனா,மாவட்ட கல்வி நிர்வாகத்தால் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா,போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியதற்காக ஷோபனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,ஒரு பள்ளி தலைமை ஆசிரியரே இப்படி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 22 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்ற செய்தி அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவரயும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Published by
Edison

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago