#BREAKING: சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கேட்டு மனு..!

Published by
murugan

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.

சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்த  அளித்ததன் பேரில் சிவசங்கர் பாபா கைது செயப்பட்டார். இப்போது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையில், பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக தீபா மீது போக்சோ சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபா வெங்கட்ராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில்,  சுஷில் ஹரி பள்ளியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆங்கில ஆசிரியராக தற்போது வரை பணியாற்றி வருவதாகவும்,  எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த எந்த உண்மையும் இல்லை எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் என்னென்ன நிபந்தனை வழங்குகிறதோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

3 minutes ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

21 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

39 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago