பெரியார் சிலை – கடவுள் மறுப்பு வாசகம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

Default Image

பெரியார் சிலைக்கு கிழே கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அமைந்து இருக்கும் சமுக சீர்திருத்தவாதி பெரியார் சிலைகளின் கீழ் கடவுள் மறுப்பு வாசகம் இடம் பெற்று இருக்கும். பெரியாரே தனது சிலை நிறுவினால், அதில் கடவுள் மறுப்பு வாசகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறியதன் பெயரின் அவர் சிலைக்கு கீழே கடவுள் மறுப்பு வாசகம் இடம்பெற்று இருக்கும்.

 கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும், அது கடவுள் வழிபடுவோரின் மனதை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு விசாரிக்க தொடங்கியது. இது குறித்து, ‘ கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க தமிழக அரசு தொடர்ந்து செலவு செய்ய முடியுமா.?’ எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்