நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்ய அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்..!

Default Image

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கு தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அவர் அகற்றவும், விதிமுறைகளை மீறி புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்யும் சூழல் நிலவிய போது, அவரை பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்று இந்த வழக்கில் முறையிடப்பட்டது.  இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் அவரை பணியிடம் மாற்றம் செய்ய ப இடைக்கால தடை விதித்து இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்