சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, சசிகலாவின் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து திருப்பிய சசிகலாவின் வருகை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அரசியலுக்கு வரவில்லை என சசிகலா கூறியிருப்பது, அவரது ஆதரவாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகலாவின் இந்த முடிவால், தாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சற்று நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…