புதுக்கோட்டை:12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர்,கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது,அங்கு வந்த திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர்,அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும்,அந்த சிறுமியை தொந்தரவு செய்து அடித்தபோது அருகே இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து,சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை கீரனூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.அதன்பின்னர்,குற்றவாளி மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,நான்கு மாத காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும்,குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறிப்பாக,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு முன்னதாக ,இது போன்ற வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…
சென்னை -நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து…
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு…
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…