ரூ.4 கோடி பறிமுதல்! வெளியான முதல் தகவல் அறிக்கை… நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

Published by
பாலா கலியமூர்த்தி

Nainar Nagendran: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு பணம் மற்றும் மற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் 6ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதில் சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்து, அவர்களையும் கைது செய்திருந்தனர்.

கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த மூன்று பேரும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அவர்கள் கூறியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல்துறை சோதனை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் பாஜக பிரமுகரான கோவர்தன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சோதனை நடத்தியதில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த வழக்கில் தாம்பரம் காவல்துறை FIR பதிவு செய்தது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க தான் அந்த பணத்தை எடுத்து சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் கார்டு  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, ரூ.4 கோடி பணம் என்னுடையது இல்லை என்று நயினார் நாகேந்திரன் மறுத்திருந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரன் 7 நாட்களுக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நயினார் நாகேந்திரன் உறவினர் துரை என்பரிடம் காவல்துறை சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

7 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

11 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

12 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

12 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

13 hours ago