தமிழகம்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறந்துள்ளன.
வருடம்தோறும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, 1 மாதத்திற்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானதால், பள்ளிகள் ஜூன் 6ம் தேதி அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை முதலில் அறிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை வீசியதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தது பள்ளிக்கல்வி துறை.
பள்ளி இறுதித்தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது. புதிய கல்வி ஆண்டில், ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், இன்றைய நாள் ஜூன்-10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், முதல் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான கவுன்சிலிங் பாடம் வழங்கவும் அந்தந்த பள்ளிகள் ஏற்பாடு செய்து உள்ளன.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…