கொடைக்கானலில் கோடை விழா ரத்து.! – ஆட்சியர் அறிவிப்பு.!

Default Image

கொடைக்கானலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த கோடை விழாவானது இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நாளை மறு நாள் மே 3ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு,தளர்வு பற்றி இன்னும் அரசு அறிவிக்கவில்லை.

இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தடைபட்டுள்ளன. தமிழகத்தில், பங்குனி, சித்திரை மாதங்களில்  நடைபெற இருந்த பல்வேறு விழாக்கள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த கோடை விழாவானது இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த கோடை விழாவின் நடைபெறும் மலர் கண்காட்சி, படகு போட்டி போன்ற அனைத்து கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்