கனத்த இதயத்தோடு கண்ணீர் மல்க கதறி அழுதபடி குழந்தையை வழியனுப்பிய சுஜித்தின் பெற்றோர்! குழந்தையின் உடல் நல்லடக்கம்!

Default Image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், 5-வது நாள் காலையில் குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சுஜித் மீண்டு வருவான் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் மற்றும் பரிசாக கிடைத்தது. சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட  குழந்தையின் உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பல பிரபலங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.
இதனையடுத்து, கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்து வரப்பட்ட சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்