திடீர் திருப்பம்…! அதிமுகவுடன் இணைந்து செயல்பட நாங்க ரெடி …! தீபா அறிவிப்பு

Default Image

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்  என்று   எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள அனைவரும் அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதேபோல் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

Image result for deepa

தற்போது தமிழகத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர்  பழனிசாமியுடன்  இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.

மேலும் சசிகலா அணியில் அவர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார் .சுதாரித்த தினகரன் மட்டும் வழக்கில் இருந்து தப்பி தற்போது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சும்மா இல்லாமல் தானும் ஒரு கட்சியை ஆரம்பிப்பேன் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா கருத்து ஒன்றை கூறியுள்ளார் . சேலத்தில் தீபா கூறுகையில்,அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் .தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம். அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்