நாளை வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த படியாக 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்தது. ஆனால், அதுவும் தோல்வியானது 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அந்த வகையில், புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் புதுச்சேரியில் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியானது.
ஆனால் தற்பொழுது, டிக்கெட் விநியோகிப்பதில் பல்வேறு நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் படம் என்றாலே பிரச்சனை…லியோவில் ஆபாச வார்த்தை இருக்காது – லோகேஷ் கனகராஜ் பேட்டி!
மறுபக்கம், தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் முதல் காட்சி 9 மணிக்கு வெளியாவதால், புதுவையில் 7 மணிக்கு திரையிட முடியாது எனவும், முதல் காட்சியாக 10 மணிக்கு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், காலை 7 மணி காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் திரையரங்குகள் முன்வரவில்லை என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…