சென்னையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேற்று திடீரென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 6 ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மேற்பார்வையிட்டார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்துள்ளார்.
அங்கு கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய் மற்றும் 14 அத்யாவசிய மளிகை பொருட்கள் ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் மேற்பார்வையிட்டுள்ளார். மேலும், ரேஷன் கடை ஊழியர்களிடம் மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைவாக இப்பணிகளை சிறப்பாக செய்து முடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர், பொது மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பொருட்களை குறித்து கேட்டுள்ளார். பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறதா..? என்பதை விசாரித்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கிருக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…