தனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.! பதற்றமடைந்த பயணிகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சேலத்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேம்படிதாளம் வழியாக இளம்பிள்ளை பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் என்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருக்கும் பயணிகளை விரைவாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பேருந்தில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பரவியது. முன்னெச்சரிக்கையாக பேருந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பேருந்தின் என்ஜினில் எலக்ட்ரிக் ஷாக் ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

18 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago