கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று சென்னையில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40 A என்ற மாநகர பேருந்தை சிறைபிடித்தனர்.பின்னர் பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பேருந்தின் மேற்கூரை மேலே ஏறினார்கள்.பின்னர் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் பஸ் டே கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
மேற்கூரையில் கும்பலாக ஏறி விசில் அடித்து ஆட்டம் போட்டு வந்தனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர் திடீரென பிரேக் போட்டதால் ,பேருந்து ஓட்டுனரும் திடீரென பிரேக் பிடித்தார்.இதனால் பேருந்தின் மேற்கூரையில் இருந்த மாணவர்கள் மளமளவென கீழே விழுந்தார்கள்.பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்த்துறை அந்த இடத்திற்கு வந்தனர்.பின்னர் அங்கிருந்த மாணவர்கள் தப்பியோடினார்கள்.ஒரு சில மாணவர்களை காவல்த்துறை பிடித்து எச்சரித்து அனுப்பிவிட்டனர்.பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், மாணவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்துள்ளன.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…