கோவையில் அடுத்தடுத்து கொலைகள்.. இரண்டு நாட்களில் 35 ரவுடிகள் கைது!

Default Image

கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து ரவுடியிசத்தை கட்டுப்படுத்த காவல்துறை அதிரடி நடவடிக்கை.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய காவல்துறை நடத்திய சோதனையில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு வாகன, விடுதி தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கடந்த 2 நாட்களில் 35 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது தனிப்படை போலீஸ். கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

kovaipolice

கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என  அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. இதன் காரணமாக கோவை முழுவதும் வாகன தணிக்கை நடத்தி சந்தேய சந்தேகத்துக்கிடமானோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 35 ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்