வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் – ஈபிஎஸ்

Default Image

திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது என ஈபிஎஸ் பேச்சு.  

திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரையாற்றியுள்ளளார். அப்போது பேசிய அவர், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்; திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது.

நான் ஒரு விவசாயி, மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன்; ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை ஓய மாட்டோம். உதயநிதி அமைச்சரானால் பாலாறும் தேனாறுமா ஓடபோகிறது. அவர் ஊழலுக்கு தான் தலைவராவார்.

உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தேடி பதவி கொடுக்கும் கட்சி அதிமுக. குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் உரிமை தொகையை தருவதாக கூறிவிட்டு கொடுக்கவில்லை. திமுக அழுத்த வாக்குறுதி படி டீசல் விலையை குறைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்