அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்: பிரேமலதா விஜயகாந்த்.!

Default Image

மக்களவைத் தேர்தல் : தமிழ்நாடு விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அதேபோல், போட்டியிட்ட மேலும் 4 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “அரசியலில் வெற்றி தோல்வி சகஜம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, கடைசிவரை வீரமாகப் போராடி களத்தில் சரித்திரம் படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம்.

தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி காண கடுமையாக உழைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும். ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் பெற்று அசைக்க முடியாத சக்தியாக கூட்டணியை மாற்றிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்