சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடக்கம்! அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி!

Published by
லீனா

கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிறது. அந்தவகையில், அரசு அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், அலுவலகங்களும் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இதனையடுத்து கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  ஏற்கனவே 30 புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று முதல் கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம்.

மேலும், அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்றும், அடையாள அட்டை இல்லாதவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை  என்றும், உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டபிறகு சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 minutes ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

30 minutes ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

2 hours ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

3 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

3 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

4 hours ago