மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்!

Published by
Rebekal

மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது கொஞ்ச நாட்களாக தமிழக அரசு மக்களுக்காக சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, போக்குவரத்து துறை, தொழில்துறை என சில தளர்வுகளை அரசு மக்களுக்காக ஏற்படுத்தி வரக் கூடிய நிலையில் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய கூடிய வகையில் மேலும் தளர்வு நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பேருந்தில் செல்ல கூடிய அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு மிகுந்த பயனாக உள்ளது.

அதே சமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மின்சார ரயில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி புரிய கூடிய பல்லாயிரக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்தவர்கள். ஊரடங்கால் புறநகர் மின்சார ரயில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்யக்கூடிய தனியார் தொழிலாளர்களின் நெருக்கடி குறைந்து நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும் எனவும், குறித்த நேரத்தில் பணிக்கு சென்று வர ஏதுவாக இருக்கும் எனவும் தமிழக மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

32 minutes ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

34 minutes ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

1 hour ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

2 hours ago

முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!

பஞ்சாப் :  ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…

2 hours ago

ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த பிரதமர் மோடி! பலே திட்டம் தீட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…

3 hours ago