சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் பலரின் பசி தீர்த்த “சுப்ரமணியம்”காலாமானார் .!

Published by
Ragi

சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த சுப்ரமணியம் காலாமானார்.

கோவையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்றாலே அனைவருக்கும் தெரியும் .அதன் மூலம் பல நற்பணிகளை செய்து வந்தவர் சுப்ரமணியம் . இவர் 1972-ம் ஆண்டு சாந்தி கியர்ஸ் நிறுவனம் என்பதை தொடங்கி அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இயந்திர உதிர பாகங்களை தயாரித்து கொடுத்து வளர்ச்சியடைந்தார் .

அதனையடுத்து 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பினை துவங்கிய இவர் அதன் அறங்காவலராகவும் இருந்தார்.இதனிடையே சமீபத்தில் இவர் தனது சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வேறு நிறுவனத்திற்கு விற்ற பின்னர் சோஷியல் சர்வீஸை முழு நேர பணியாக செய்து வந்தார் .

அதன் படி லாப நோக்கமின்றி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உணவகம் , மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் உணவு அதாவது ரூ.5-க்கு டிபனும் ,ரூ.10-க்கு மதிய சாப்பாடு வழங்குவது மட்டுமின்றி தினமும் 60வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கி வந்தார் .

மேலும் அவர் தனது மருத்துவமனையில் உள்ள மருத்துவரின் கட்டணம் ரூ.30 மட்டுமே .அதே போன்று மருந்தகத்தில் மருந்து வாங்குபவர்களுக்கு 30% விலை குறைத்து வழங்கப்பட்டு வந்தது .இதுதவிர இந்த அமைப்பின் பெயரில் நடத்தப்படும் பெட்ரோல் பங்கிலும் ஸ்டாக் எடுக்கும் போது என்ன விலைக்கு டீசல் ,பெட்ரோல் விற்கப்பட்டதோ ,அந்த விலைக்கே ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும் .இதனாலையே இவரது அமைப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது . இவ்வாறு மக்களும் பல ரீதிகளில் உதவும் சுப்பிரமணியம் இதுவரை ஊடகங்களிடம் தனது சேவைகளை குறித்து பேசியதோ ,அவரது முகத்தை காட்டவோ செய்ததில்லை .

மனிதநேயத்துடன் செயல்பட்ட 78 வயதான சுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .அவரின் முகம் பலருக்கும் தெரியாது என்றாலும் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை தீர்த்த அவரின் மறைவிற்கு பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago