சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ! அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published by
Venu

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு  பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.

சென்னையில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது  பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக  இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதில் சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.இந்த வழக்கை  நீதிபதி ரமேஷ் என்பவர் விசாரித்தார்.அப்போது தமிழக அரசு தரப்பில் இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் பதில் அளிக்க அவகாசம் கோரியது அரசு தரப்பு.

ஆனால்  சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும்  சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.மேலும்  மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு நாளை மறுநாள் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago