சுபஸ்ரீ வழக்கு ! அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி வரை சிறை -நீதிமன்றம் அதிரடி

Default Image

அக்டோபர் 11-ஆம் தேதி வரை அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை சிறையில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது  ஆலந்தூர் நீதிமன்றம்.

சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார்.சுபஸ்ரீ தொடர்பான வழக்கில் சென்னை  உயர்நீதிமன்றம் ஜெயகோபாலை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக  இருந்த ஜெயகோபாலை  தீவிரமாக தேடி வந்த நிலையில் ஓசூர் அருகே தனிப்படை போலீசார் நேற்று  கைது செய்தனர்

இந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜெயகோபால். அக்டோபர் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயகோபாலை சிறையில் வைக்க உத்தரவு பிறப்பித்தது ஆலந்தூர் நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்