சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ அப்பகுதி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த திருமண வாழ்த்து பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்தது. நிலை தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலர் தங்கள் சார்பாக இனி பேனர் வைக்கப்போவதில்லை என அறிவித்தனர்.
இது தொடர்பாக அதிமுக பிரமுகர் முன்னாள் கவுன்சிலர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சுபஸ்ரீ இறந்ததற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு துறையினர் விசாரிக்க வேண்டும் எனவும், பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக தமிழக அரசு உள்ளிட்ட 4 பேரை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…