3 ம் வகுப்பு படிக்கும் மாணவியின் உலக சாதனை – திருக்குறளில் படைத்த சாதனை

Default Image

திருவண்ணாமலை வந்தவாசி அருகே அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மனைவி தர்ஷினி. 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக  சாதனை படைத்துள்ளார்.

கல்லாகுத்து கிராமத்தைச் சேர்ந்த ஆனைக்குட்டி – சத்யா தம்பதியின் மகள் தர்ஷினி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தர்சினி அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே திருக்குறளில் அதிகம் நாட்டம் கொண்ட மாணவி அதில் சாதனை படைத்துள்ளார். ஒன்றாம் படிக்கும் பொது 1 நிமிடத்தில் 27 திருக்குறள் பாராமல் கூறி அனைவரையும் வியக்க வைத்தார். மாணவியின் திறமையை கண்டு ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்தி வந்தனர். இரண்டாம் வகுப்பு படிக்கையில் 4 நிமிடத்தில் 110 திருக்குறளை ஒப்புவித்து புதிய சாதனை படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முன்னிலையி நடந்த உலக சாதனையில், 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 க்கும் மேற்பட்ட குரல்களை ஒப்புவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அவரது திறமையை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் தர்ஷினியின் குடும்பத்திற்கு பசுமை வீடு ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்