தேர்வு முறை மாற்றம் குறித்து மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் -அண்ணா பல்கலைகழக பதிவாளர்

Default Image

தேர்வு முறை மாற்றம் குறித்து மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம் முன்பு மாணவர்கள் நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர்  அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முடிவுக்கு வந்தது.

அதன் பின் அவர் கூறுகையில்,  மாணவர்களின் கோரிக்கைகளை மறு பரிசீலனை செய்கிறோம். அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, உரிய முடிவு எடுக்கப்படும்.தேர்வு முறை மாற்றம் குறித்து மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம், பேராசிரியர்களும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்