முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த மாணவர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் கலந்துகொண்டு, அதனை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி, அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, குறிப்பிடப்படுகிறது.

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மணமகன் கூட படித்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மணமக்கள் மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மண மேடையில் புது தம்பதியினர் மற்றும் மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் நடனமும், ஆடியிருக்கின்றார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறைல் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய மாப்பிள்ளை மற்றும் தூண்டிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

16 minutes ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

48 minutes ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

3 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

3 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

4 hours ago