தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும் – அமைச்சர் பொன்முடி

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தாக அமைச்சர் தகவல்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த அனைத்து கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. அவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ள கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறது.

இதில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டும். அப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டியிருந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செப்டம்பர் 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கட்டாயம் விடுதிகளில் உள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விட்டு செல்லவேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் செய்யும் எனவும்கூறினார். அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசும்போது, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago